கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்

ரஷியா எச்சரிக்கை விடுத்தும், அதனை துச்சமென தூக்கியெறிந்த உக்ரேனிய வீரர்கள், மரியுபோல எஃக் ஆலையில் கடுமையான தாக்குதல் எதிர்கொண்டு வருகிறார்கள்.

News image
மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
Updated On :18 ஏப்ரல் 2022, 11:59 am

DIN

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என ரஷியா எச்சரிக்கை விடுத்தும், அதனை துச்சமென தூக்கியெறிந்த உக்ரேனிய வீரர்கள், மரியுபோல எஃக் ஆலையில் கடுமையான தாக்குதல் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சரணடைய மாட்டோம்.. இறுதிவரை போராடுவோம் என்ற கொள்கையின்படி, மரியுபோலில் ரஷிய படைகளை எதிர்த்து எஃகு ஆலையில் உக்ரேனிய படைகள் கடுமையாக போராடி வருகிறது. துறைமுக நகரமாகவும் உக்ரேனிய படையின் எதிர்ப்பாற்றலின் சின்னமாகவும் இருந்த மரியுபோல் நகரம் ரஷிய படைகளின் பிடியில் மெல்ல சிக்கிவருகிறது. 

நாட்டின் பிற பகுதிகள் ஏவுகணைகளாலும் ராக்கெட் வீச்சுகளாலும் சிக்கி சின்னாபின்னமாகிவரும் நிலையில், தங்களது பிடிக்குள் வரும் பகுதியில் இருப்பவர்களை ரஷிய படை வீரர்கள் கொடூரமாக துன்புறுத்துவதாகவும் கடத்திச் செல்வதாகவும் உக்ரேனிய அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷியாவின் மாஸ்க்வா போா்க் கப்பலை உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழித்ததைத் தொடா்ந்து, உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. கீவ் நகரில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா கடந்த சனிக்கிழமை கூறியது.

இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷிய படையினா் கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை ஒன்றில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரா்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ரஷிய படையினரை எதிா்த்து சண்டையில் ஈடுபட்டு வரும் அவா்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு உடனடியாக சரணடைய வேண்டுமென ரஷியா எச்சரித்திருந்தது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகோா் கொனஷென்கோ கூறுகையில், உக்ரைன் படையினா் சரணடைவதற்கு அந்நாட்டு ராணுவத் தலைமை தடை விதித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் படையினருடன் சோ்த்து வெளிநாடுகளைச் சோ்ந்த கூலிப் படையினா் 400 பேரும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா். அனைவரும் உடனடியாக சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என்றாா்.

மரியுபோலை கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் உள்ள உக்ரைன் வீரா்களை பலமிழக்கச் செய்யும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்துள்ளது. தலைநகரை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியை நோக்கி ரஷியா தனது போா்த் திட்டத்தை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.