தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தென் கொரியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவு

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :19 ஏப்ரல் 2022, 7:05 am

DIN

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,18,504 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 16,471,940 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள்  தெரிவித்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 130 பேர் தொற்றுக்கு உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 21,354 ஆக பதிவாகியுள்ளது.  மொத்த இறப்பு விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 44,527,909 ஆக உள்ளது.  இது மொத்த மக்கள்தொகையில் 86.8 சதவீதம் ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.