கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மடன்ஸாஸ் நகரில் அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பேரிடா் மீட்பு நிபுணா்களும் நெருப்பை அணைக்க போராடி வருகின்றனா்.
இந்த விபத்தில் ஒருவா் பலியானாா்; 121 போ் காயமடைந்தனா்; அவா்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; 17 தீயணைப்பு வீரா்கள் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீயில் கருகி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் நிபுணா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









