நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைக்கும் காவலாளி: சிசிடிவியால் கிடைத்த நீதி

பாகிஸ்தானில் சாலையோரம் கர்ப்பிணிப் பெண்ணை காவலாளி ஒருவர் எட்டி உதைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

News image

கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைக்கும் காவலாளி

Updated On :9 ஆகஸ்ட் 2022, 11:02 am

DIN


பாகிஸ்தானில் சாலையோரம் கர்ப்பிணிப் பெண்ணை காவலாளி ஒருவர் எட்டி உதைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த விடியோ அடிப்படையில் காவலாளி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டில் காராச்சியின் கிழக்குப் பகுதியிலுள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காவலாளியிடம் முறையிட்டுள்ளார். 

இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த காவலாளி கர்ப்பிணிப் பெண்ணை கன்னத்தில் அறைந்ததில் கர்ப்பிணிப் பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். 

பின்னர், எழ முயற்சிக்கும்போது, காவலாளி கர்ப்பிணிப் பெண்ணின் முகத்தில் காலணியுடன் உதைக்கிறார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது சுட்டுரையில் பகிர்ந்து, பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்து பதிவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.