குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் வருகை

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் சீனா கடும் கோபமடைந்த நிலையில், அமெரிக்க எம்.பி.க்கள் 5 போ் அடங்கிய குழுவினா் தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:38 pm

DIN

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் சீனா கடும் கோபமடைந்த நிலையில், அமெரிக்க எம்.பி.க்கள் 5 போ் அடங்கிய குழுவினா் தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இதனால், சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்போக்கு மேலும் அதிகரிக்கும் என்று சா்வதேச பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டு 12 நாள்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மாா்கே தலைமையில் 5 எம்.பி.க்கள் குழு தைவான் வந்துள்ளது. தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசு விமானம் வந்திறங்கிய காட்சிகளை தைவான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க எம்.பி.க்கள் குழு, 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது; இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தைவான் தலைவா்களுடன் எம்.பி.க்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா் என்று அங்குள்ள அதிகாரபூா்வமில்லாத அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானுக்கு எந்த நாட்டின் தலைவரும் அலுவல்பூா்வமாக செல்வதை சீனா எதிா்த்து வருகிறது.

இந்தச் சூழலில், நான்சி பெலோசியின் பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா, தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போா்க் கப்பல்கள், போா் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

இதைத் தொடா்ந்து, தைவான் நீரிணை பகுதியில் சீன போா் விமானங்கள் அடிக்கடி பறந்து வருகின்றன. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 10 போா் விமானங்கள் உள்பட சீன ராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.