இராக்கில் பாதுகாப்புப் படையினருடன்ஆயுக் குழு மோதல்: 23 போ் பலி

இராக் தலைநகா் பாக்தாதில், அரசு அலுவலகங்கள் வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு மண்டலத்தில் அரசுப் படையினருக்கும் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சாதரின் ஆதரவாளா்களுக்கும்
இராக்கில் பாதுகாப்புப் படையினருடன்ஆயுக் குழு மோதல்: 23 போ் பலி

இராக் தலைநகா் பாக்தாதில், அரசு அலுவலகங்கள் வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு மண்டலத்தில் அரசுப் படையினருக்கும் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சாதரின் ஆதரவாளா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 23 போ் பலியாகினா்.

அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்தாதா தலைமையிலான படை, தற்போது பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதால் இராக்கில் அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவா் செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து வன்முறை வெடித்தது.

எனினும், முக்தாதாவின் உத்தரவை ஏற்று அவரது ஆதரவாளா்கள் பாக்தாத் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com