கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் மிகைல் கோர்பசேவ் காலமானார்

சோவியத் யூனியன் முதுபெரும் அரசியல் தலைவர் மிகைல் கோர்பசேவ்(91) வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2022, 4:25 am

DIN

மாஸ்கோ: சோவியத் யூனியன் முதுபெரும் அரசியல் தலைவர் மிகைல் கோர்பசேவ்(91) வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு ரஷிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சோவியத் யூனியன் புத்துயிர் பெறுவதற்காக புறப்பட்ட மிகைல் கோர்பசேவ், கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கும், நொறுங்கிப்போன சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்றுவதற்காக தோல்வியுற்ற போரில் ஈடுபட்டு, பனிப்போரினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அசாதாரண சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் தனது 91 வயதில் காலமானார். 

மாஸ்கோவில் உள்ள மத்திய மருத்துவ மருத்துவமனையின் அறிக்கையின்படி, நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கோர்பச்சேவ் செவ்வாய்க்கிழமை இறந்தார். 

ஏழு வருடங்களுக்கும் குறைவாக ஆட்சியில் இருந்தாலும், கோர்பசேவ் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்த மாற்றங்களை கொண்டுவந்தார்.

ஆனால், அவை விரைவாக அவரை விஞ்சியது. அதன் விளைவாக சர்வாதிகார சோவியத் அரசின் வீழ்ச்சி, ரஷிய ஆட்சியில் இருந்து  கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை மற்றும் பல தசாப்தங்களாக கிழக்கு-மேற்கு அணுசக்தி மோதலின் முடிவு. அவரது வீழ்ச்சி அவமானகரமானது. 

1991 ஆகஸ்டில் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் அவரது அதிகாரம் குறையத் தொடங்கியது. குடியரசு சுதந்திரம் அறிவித்த பிறகு டிசம்பர் 25.1991 இல் ராஜிநாமா செய்யும் வரை குடியரசைக் கவனித்துக் கொண்டே கடைசி மாதங்களைக் கடந்தார்.  

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இரங்கல்: கோர்பசே குறிப்பிடத்தக்க தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் அவர் ஒரு அபூர்வமான தலைவர் என்றும் வித்தியாசமான எதிர்காலம் சாத்தியம் என்பதைக் காணும் கற்பனையும், அதை அடைவதற்காக தனது முழு வாழ்க்கையையும் பணயம் வைக்கும் தைரியமும் கொண்டிருந்தவர்.

இதன் விளைவாக ஒரு பாதுகாப்பான உலகம் மற்றும் லட்சக் கணக்கான மக்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்ததாக  பைடன் கூறியுள்ளார்.

கோர்பச்சேவைவிட வரலாற்றின் போக்கை நேர்மறையான திசையில் மாற்றிய ஒரு நபரைப் பற்றி நினைப்பது கடினம் என்று ஒரு அரசியல் ஆய்வாளரும் முன்னாள் யு.எஸ். மாஸ்கோவில் உள்ள தூதர் மைக்கேல் மெக்ஃபால் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.