இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

இந்தோனேசியாவின் செமெரு எரிமலை சீற்றம் காரணமாக, அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் (Photo | AP)
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் (Photo | AP)
Published on
Updated on
1 min read

இந்தோனேசியாவின் செமெரு எரிமலை சீற்றம் காரணமாக, அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல், எரிமலை சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 2,400 கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

ராணுவத்தினர், காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், கிராம நிர்வாகிகள் என பல துறையினர், கிராம மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இப்பகுதியில் மாநில அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மூன்று வேளை உணவு அளிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலர் அடிப்படைத் தேவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீடுகளைப் பூட்டிக் கொண்டுச் செல்வதையும், சிலர் டிவி உள்ளிட்ட அதிக விலை கொண்ட பொருள்களைத் தூக்கிக் கொண்டு முகாமுக்குச் செல்வதையும் காண முடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com