தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'சூரிய ராணி' மரியா டெல்கேஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்

சூரிய ராணி என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியின் முன்னோடியாக விளங்கிய டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்தநாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

News image
'சூரிய ராணி' மரியா டெல்கேஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்
Updated On :12 டிசம்பர் 2022, 10:35 am

DIN

சூரிய ராணி என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியின் முன்னோடியாக விளங்கிய டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்தநாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கூகுள் நிறுவனம், முக்கிய நபர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சூரிய சக்தியின் முன்னோடியான டாக்டர் மரியா டெல்கேஸ், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றலாம் என்று மரியா உறுதியாக நம்பினார். ஆம். அவர் சொன்னது சரிதான். அதற்காக அவர் 1952ஆம் ஆண்டு பெண் பொறியாளர்கள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1900ஆம் ஆண்டு ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் பிறந்தவர் டாக்டர் டெல்கேஸ். இயற்பியல் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். 1924ஆம் ஆணடு பிஎச்டி முடித்தார்.  பிறகு அமெரிக்கா சென்று பயோபிசிஸ்ட் ஆகப் பணியைத் தொடர்ந்தார். எம்ஐடியில் சூரிய சக்தி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 

இரண்டாம் உலகப் போரின் போது, கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை உருவாக்க அமெரிக்க அரசால் அழைக்கப்பட்டார். இந்த உயிர்காக்கும் திட்டத்தின் மூலம், பசிபிக் கடலில் நிறுத்தப்பட்ட ஏராளமான வீரர்களின் உயிரைக் காக்க உதவியது.

பிறகு மீண்டும் எம்ஐடி திரும்பிய டெல்கேஸ், ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக இணைந்தார். அவர், எம்ஐடி பேராசிரியருடன் இணைந்து, சூரிய சக்தியால் வெப்பமாகும் வீட்டை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது திட்டம் தோல்வியடைந்தது. அந்தக் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஆனால் அவரது கூற்றுகள் மட்டும் நிலைத்தன.

பிறகு 1948ஆம் ஆண்டு தனியாரின் உதவியுடன் டோவர் சூரிய சக்தி வீடகளை உருவாக்கினார். அந்த திட்டம் வெற்றி பெற்றது, ஊடகங்கள் மூலம் புகழ்பெற்றார் டெல்கேஸ்.

பல வெற்றிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சியிலேயே தனது வாழ்நாளைக் கழித்தவர் டாக்டர் மரியா டெல்கேஸ்.  பிறகு அவர் ஃபோர்டு அறக்கட்டளையை உருவாக்கினார், இப்போதும் அவர் உருவாக்கிய சூரியசக்தி அடுப்பு பயன்பாட்டில் உள்ளது.

சூரிய சக்தி மூலம் உருவாக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளார். அவர் வசம் சுமார் 20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை வைத்திருந்தார். ஏராளமான எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இதனால்தான் அவர் சூரிய ராணி என்று அழைக்கப்படுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.