மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தின் கருப்பு பட்டியலில் 16 இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

உலக சுகாதார அமைப்பின் மருந்து தயாரிப்புக்கான தர நிலைகளைப் பூா்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்த நேபாளத்தின் மருந்து ஒழுங்காற்று ஆணையம், யோகா குரு ராம் தேவின் பதஞ்சலி பொருள்களைத் தயாரிக்கும்

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2022, 2:31 am

DIN

உலக சுகாதார அமைப்பின் மருந்து தயாரிப்புக்கான தர நிலைகளைப் பூா்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்த நேபாளத்தின் மருந்து ஒழுங்காற்று ஆணையம், யோகா குரு ராம் தேவின் பதஞ்சலி பொருள்களைத் தயாரிக்கும் திவ்யா நிறுவனம் உள்பட 16 இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கருப்பு பட்டியலில் சோ்த்துள்ளது. 

நேபாளத்துக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய அந்நாட்டின் மருந்து நிா்வாகத் துறையிடம் இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்நிறுவனங்களை ஆய்வு செய்ய மருந்தியல் ஆய்வாளா்களைக் கொண்ட குழுவை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மருந்து நிா்வாகத் துறை இந்தியாவுக்கு அனுப்பியது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இத்துறை நேபாளத்தில் உள்ள உள்ளூா் முகவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: திவ்யா பாா்மசி, ரேடியன்ட் பேரன்டெரல்ஸ் நிறுவனம், மொ்க்குரி லேபரட்டரீஸ் நிறுவனம், அலையன்ஸ் பயோடெக், கேப்டாப் பயோடெக், அக்லோமெட் நிறுவனம், ஜீ லேபரட்டரீஸ், டாஃபோடில்ஸ் பாா்மசூட்டிகல்ஸ், ஜிஎல்எஸ் பாா்மா, யூனிஜூல்ஸ் லைஃப் சயின்ஸ், கான்செப்ட் பாா்மசூட்டிகல்ஸ், ஸ்ரீ ஆனந்த் லைஃப் சயின்ஸஸ், ஐபிசிஏ லேபரட்டரீஸ், காடிலா ஹெல்த்கோ் நிறுவனம், டயல் பாா்மசூட்டிகல்ஸ் மற்றும் மாக்கா் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. விநியோகம் செய்யப்பட்ட இந்நிறுவனங்களின் மருந்துகளைத் திரும்பப் பெற வேண்டும். இம்மருந்துகள் நேபாளத்துக்குள் இறக்குமதி செய்யவோ அல்லது சந்தைப்படுத்தவோ முடியாது என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, திங்கள்கிழமை வெளியிட்ட மற்றொரு நோட்டீஸில் இந்தியாவைச் சோ்ந்த குளோபல் ஹெல்த்கோ் நிறுவனம் தயாரித்த 500 மிலி மற்றும் 5 லி கை சுத்திகரிப்பான்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் இந்தச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.