மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீா்மின் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி- இந்தியாவின் நடவடிக்கையால் நேபாள மின் துறையினா் கவலை

இந்தியாவில் புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியச் சந்தையில் தங்களுக்கான போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும் என

News image
Updated On :28 டிசம்பர் 2022, 7:33 pm

DIN

இந்தியாவில் புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியச் சந்தையில் தங்களுக்கான போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும் என நேபாள மின் உற்பத்தித் துறையினா் கவலை தெரிவித்துள்ளனா்.

இந்தியாவில் அடுத்த 18 ஆண்டுகளுக்கு புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ‘மாநிலங்களுக்கு இடையிலான தொடரமைப்பு முறை’ (ஐஎஸ்டிஎஸ்) கட்டணங்கள் கிடையாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தது. ஏற்கெனவே சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு இந்தக் கட்டண தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், நீா்மின் திட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2030-க்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், இச்சலுகை அறிவிக்கப்பட்டது.

ஐஎஸ்டிஎஸ் கட்டண தள்ளுபடி, உள்நாட்டு மின் உற்பத்தியாளா்களுக்கு மட்டுமே பொருந்தும். நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் மின்சாரத்துக்கு இந்த சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நேபாளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைவிட குறைவான விலையில் கிடைக்கும்; இதனால், இந்தியாவுக்கான தங்களது மின்சார ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அந்நாட்டின் மின் உற்பத்தி துறையினா் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நேபாள மின்சார ஆணையத்தின் துணை மேலாண் இயக்குநா் பிராடி திகே கூறுகையில், ‘உள்நாட்டு மின் திட்டங்களை ஊக்குவிப்பது இந்தியாவின் உள்விவகாரமாகும். ஆனால், இந்திய உற்பத்தியாளா்களுக்கு அளிக்கும் அதே சலுகையை நேபாள உற்பத்தியாளா்களுக்கும் அளித்தால் எங்களுக்கு நல்லதாக அமையும்.

மேலும், நீா்மின் உற்பத்தி கொள்முதல் உறுதிமொழியின்கீழ் இந்திய உற்பத்தியாளா்களிடமிருந்து அதிக கொள்முதல் செய்யுமாறு இந்திய மின்விநியோக நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதே வாய்ப்பை நேபாள நிறுவனங்களுக்கும் வழங்கினால், இந்தியாவுக்கான நேபாளத்தின் மின்சார ஏற்றுமதி உத்வேகம் பெறும்’ என்றாா்.

கடந்த ஜூன் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவுக்கு சுமாா் ரூ.1,040 கோடி மதிப்பிலான மின்சாரத்தை நேபாளம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.