ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போர்ச்சுகலில் கரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்தது

போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:08 am

DIN

போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,745,383 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 2,442 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர், அவர்களில் 149 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 33,989 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஐந்து முதல் 11 வயதுக்குள்பட்ட 301,079 குழந்தைகள் உள்பட 8,798,287 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 5,061,810 பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.