மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நான்காவது டோஸ் தேவைப்படலாம்: வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் தகவல்

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் அடுத்தடுத்த டோஸ்கள் தேவைப்படுகிறதே என கேள்வி எழுப்பிதற்கு இதுகுறித்து உன்னிப்பாக கவனித்துவருகிறோம் என மருத்துவர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

News image
வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி
Updated On :10 பிப்ரவரி 2022, 7:17 am

DIN

அமெரிக்காவில் ஒமைக்ரான் கரோனா வகையை எதிர்த்து போராடுவதற்கு நான்காவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் என வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி இன்று தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபரின் அடிப்படை மருத்துவ நிலையை பொறுத்தும் அவரது வயதை பொறுத்தும் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், "மீண்டும் மற்றொரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். குறிப்பாக, எம்ஆர்என்ஏ தடுப்பூசியை செலுத்தி கொள்வோருக்கு நான்காவது டோஸ் தேவைப்படலாம். அவரது வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து செலுத்தப்படும்" என்றார்.

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் அடுத்தடுத்த டோஸ்கள் தேவைப்படுகிறது என தரவுகள் கூறுகின்றது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இதுகுறித்து உன்னிப்பாக கவனித்துவருகிறோம் என மருத்துவர் அந்தோனி ஃபாசி பதில் அளித்தார்.

"கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு நவம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள அரை மில்லியன் மக்கள் கரோனாவால் இறந்துள்ளனர், இது கரோனா வைரஸ் நெருக்கடியின் முதர்ச்சியான கட்டம்" என்றும் ஃபாசி முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஒமைக்ரானை 'கவலையளிக்கும் மாறுபாடு' என்று பட்டியிலிட்டதிலிருந்து சுமார் 1,00,000 இறப்புகள் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் விவரித்த ஃபாசி, "ஆறு மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் நிறுவனம் தடுப்பூசி செலுத்தி பரிசோதித்ததுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.