மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி' - போப் பிரான்சிஸ் கவலை

போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் குறித்து போப் பிரான்சிஸ் ட்வீட் செய்துள்ளார். 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:01 am

போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் குறித்து போப் பிரான்சிஸ் ட்வீட் செய்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. மக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது. 

உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து ரஷியா மற்றும் ஆங்கில மொழிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'ஒவ்வொரு போரும் இந்த உலகத்தை முன்பு இருந்ததை விட மிகவும் மோசமாக்குகிறது. போர் என்பது அரசியல் மற்றும் மனித நேயத்தின் தோல்வி, வெட்கக்கேடான சரணாகதி, தீய சக்திகளுக்கு முன்னால் ஒரு கடுமையான தோல்வி' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.