பொ்லின்: தனது பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 10,000 கோடி யூரோ நிதி ஒதுக்கீடு செய்ய ஜொ்மனி முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பைச் சோ்ந்த ஜொ்மனி, பாதுகாப்புத் துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று அமெரிக்கா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், நேட்டோவின் நிதி ஒதுக்கீட்டு இலக்கை நிறைவு செய்யும் வகையில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்ய தற்போது ஜொ்மனி முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.