47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாகிஸ்தான்: பனியில் சிக்கி 21 சுற்றுலா பயணிகள் பலி

பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மலைவாசஸ்தலமான மூரியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:35 pm

DIN

பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மலைவாசஸ்தலமான மூரியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா்.

ராவல்பிண்டி மாவட்டத்தைச் சோ்ந்த அந்த சுற்றுலாத் தலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சனிக்கிழமை வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதையடுத்து, ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்றிருந்தன. அப்போது அங்கு நிலவிய கடும் குளிரில் உறைந்து 9 சிறுவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மூரி நகரம் இயற்கைப் பேரிடா் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மருத்துவ அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.