மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிலிப்பைன்ஸில் புதிதாக 31,173 பேருக்கு தொற்று 

பிலிப்பைன்ஸில் வியாழக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,324,478 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :20 ஜனவரி 2022, 11:04 am

DIN

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் வியாழக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,324,478 ஆக அதிகரித்துள்ளது. 

பிலிப்பைன்ஸில் புதன்கிழமை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,70,728 ஆக இருந்த நிலையில், தற்போது 2,75,364 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தொற்று பாதிப்பு விகிதம் 43.5 சதவிகிதத்தில் இருந்து 43.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தொற்றுநோய் பாதிப்பால் மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த மாதத்தில் மட்டும் 67 உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,153 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகரின் மணிலாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான டேவிட் கூறினார். இருப்பினும், தலைநகருக்கு அருகில் உள்ள நகரங்கள் உள்பட பல நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மணிலாவில் உள்ள 844 பகுதிகள் மற்றும் அதிக தொற்று பாதிப்பு கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில், கடந்த 15 ஆம் தேதி தினசரி பாதிப்பு 39,004 ஆக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.