பாகிஸ்தானில் கனமழை: 12 பேர் பலி, பலர் காயம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கனமழை காரணமாக 12 பேர் பலியானார்கள். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கனமழை காரணமாக 12 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. சாலைகளும் சேதமுற்றன. இதையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்பான சம்பவங்களில் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com