எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் காயம்

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :2 ஜூலை 2022, 3:18 am

DIN

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 

ஈரானின் தென்மேற்கில் பந்தர்அப்பாஸ் எனும் பகுதியில் இருந்து 100 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலநடுக்கத்துக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னதாக, 5.7 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.