கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் கோத்தபய ராஜபட்ச? 

இலங்கை அதிபர் கோத்பய ராஜபட்ச பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image

இலங்கை அதிபராகிறார் நாடாளுமன்ற அவைத் தலைவர்?

Updated On :10 ஜூலை 2022, 12:51 pm


இலங்கை அதிபர் கோத்பய ராஜபட்ச பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 3740 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் இரண்டாவது கப்பல் நாளை திங்கள்கிழமை கொழுப்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. 

முதலாவது சமையல் எரிவாயு கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.

3200 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் வரும் 15 ஆம் தேதி இலங்கை வந்தடையவுள்ளது. ஜூலை மாதத்திற்காக சுமார் 33 ஆயிரம் மெட்ரிக் டன் எரிவாயுவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை(ஜூலை 12) முதல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் சமையல் எரிவாயு நெருக்கடி முடிவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அதிபர் கோத்தய ராஜபட்சவிடம் தெரிவித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக கோத்தபய ராஜபட்ச நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் சனிக்கிழமை அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக்கோரி மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய, பிரதமர் பதவியில் இருந்து ரணிலும் பதவி விலகினால், இடைக்கால அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவர் இடைக்கால அதிபராக  பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.