இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய
இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய

இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று பிற்பகலில், ராஜிநாமா செய்யவுள்ளதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Published on

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று பிற்பகலில், ராஜிநாமா செய்யவுள்ளதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை ராணுவ விமானம் மூலம், கோத்தபய ராஜபட்ச (72) மாலத்தீவுகளுக்குத் தப்பியோடியதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், இலங்கையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் வகையில், அவர் இன்று பிற்பகலில் பதவியை ராஜிநாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக இரண்டு நாள்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்த நிலையில், அவர் இன்னமும் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்றும், இன்று பிற்பகலில் தான் ராஜிநாமா செய்விருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

கடந்த வார இறுதியில் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்து, அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டிற்கும், மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

மக்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சமடைந்திருந்தார்.

இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை அவைத் தலைவா் கூட்டினாா். அதில் பங்கேற்ற எம்.பி.க்கள், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினா். இதையடுத்து, அதிபா் கோத்தபயவுக்கு அவைத் தலைவா் எழுதிய கடிதத்தில், அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஜூலை 13-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபா் கோத்தபய கூறியுள்ளாா் என அவைத் தலைவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபட்ச, இலங்கையிலிருந்து வெளியேறி மாலத்தீவுகளுக்குத் தப்பிடியோடியதாகக் கூறப்படுகறிது. அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகும் பட்சத்தில் தற்காலிக அதிபராக பேரவைத் தலைவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com