நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

News image
Updated On :13 ஜூலை 2022, 6:52 am

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மக்களின் போராட்டத்தை அடுத்து, இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று கோரி  வருகின்றனர்.

மேலும், மஹிந்த ராஜபட்சவுக்கு பின்னர் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்று கூறியும் தற்போது மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.  

Story image

மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி லட்சத்தீவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, அதிபா் கோத்தபய இன்று தனது பதவியை ராஜிநாமா செய்கிறார். 

இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும், அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

Story image

அதிபர் மாளிகையை அடுத்து, தற்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அவசரநிலை பிரகடனத்தின்படி, ராணுவம் மற்றும் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம்,  மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.