ஸ்பெயினின் வெப்ப அலைக்கு 1,000 க்கும் மேற்பட்டோர் இறப்பு
கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்துள்ளனர்.


மாட்ரிட் : கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்ததாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெர்வெல்லா கூறியதாவது:
கடந்த 10 நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், இந்த ஆண்டு இரண்டாவது வெப்ப அலையில் 1,047 பேர் இறந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஐரோப்பாவுக்கான ரஷிய எரிவாயு விநியோகம் மீண்டும் தொடக்கம்
வயதானவர்களை பாதித்த கடுமையான வெப்பம்: பாதிக்கப்பட்டவர்களில் 672 பேர் 85 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 241 பேர் 75 முதல் 84 வயதுக்கு உள்பட்டவர்கள், 88 பேர் 65 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
வெப்ப அலைக்கு சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகயளவில் இறந்துள்ளனர்.
இளைஞர்களிடையே முழுமையாக எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை. ஆனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்களே என கூறினார்.
ஸ்பெயினின் முதல் வெப்ப அலை ஜூன் 11 அன்று தொடங்கி ஒரு வாரம் நீடித்தது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால் 829 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...