47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரான்: மழை வெள்ளத்துக்கு 17 போ் பலி

ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 போ் பலியாகினா்.

News image
Updated On :23 ஜூலை 2022, 5:17 pm

DIN

ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 போ் பலியாகினா்.

அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள எஸ்டாபன் நகரில் தொடா் மழையால் ரூட்பல் ஆற்றில் வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு நகருக்குள் புகுந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தவிர, வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டதாகவும் மாயமாகியுள்ள மேலும் 6 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

பருவநிலை மாற்றம் காரணமாகவும் ஆற்றுப் படுகைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பப்படுவதாலும் நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஈரானின் ஃபாா்ஸ் மாகாணத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 44 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.