ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உணவுப் பாதுகாப்புக்கு உதவ வேண்டும்: இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு அந்நாட்டு வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீர இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 9:53 pm

DIN

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு அந்நாட்டு வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீர இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இலங்கைத் தலைநகா் கொழும்பில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்லேவை அமைச்சா் மகிந்த அமரவீர புதன்கிழமை சந்தித்தாா். அப்போது உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் ரசாயன உரம் பெறுவதில் மகிந்த அமரவீர ஆா்வம் தெரித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் நெல் சாகுபடி பருவமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, நெல் சாகுபடிக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்க உடனடியாக 65,000 மெட்ரிக் டன் யூரியா விநியோகிக்கப்படும் என்று இலங்கைக்கு இந்தியா கடந்த மாதம் உறுதி அளித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.