விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வடகொரிய வான்வெளியில் தென்கொரிய போர் விமானங்கள்

சமீபத்தில் வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது போர் விமானங்களை வடகொரியாவின் வான்வெளியில் இயக்கியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 ஜூன் 2022, 11:44 am

DIN

சமீபத்தில் வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது போர் விமானங்களை வடகொரியாவின் வான்வெளியில் இயக்கியுள்ளது.

வட கொரிய வான்வெளியில் தென்கொரியாவின் எஃப்-35  மற்றும் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 20 போர் விமானங்கள் மஞ்சள் கடலின் மேலே பறந்துள்ளன. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்காக இந்த பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் உறுதியான கூட்டமைப்பு வடகொரியாவின் எந்த ஒரு அச்சுறுத்தறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வடகொரியா குறுகிய தொலைவில் சென்று தாக்கக் கூடிய 8 ஏவுகணைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே அந்த நாட்டின் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்தது பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.