மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்காவுடன் எந்த ராணுவ ஒப்பந்தமும் இல்லை: நேபாளம்

அமெரிக்க ராணுவத்துடன் நேபாள அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியானத் தகவலை நேபாள ராணுவம் மறுத்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூன் 2022, 1:40 pm

DIN

அமெரிக்க ராணுவத்துடன் நேபாள அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியானத் தகவலை நேபாள ராணுவம் மறுத்துள்ளது.

நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற எந்த ஒரு ஒப்பந்தத்திலும் நேபாள அரசு கையெழுத்திடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறிருப்பதாவது, “நேபாள அரசு தனது அணி சேராக் கொள்கையில் தெளிவாக உள்ளது. அதனால், நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து தரும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா நேபாள அரசுடன் எந்த ஒரு ராணுவ ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சில ஆன்லைன் ஊடகங்களால் நேபாளத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பொய்யானத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்லைன் ஊடகங்களில் கூறுவது போல் அந்த ஒப்பந்தம் பாதுகாப்பு ஒப்பந்தமோ அல்லது ராணுவ ஒப்பந்தமோ இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் நேபாள மக்களின் நலன் சார்ந்ததாகும். நேபாள அரசு இந்த ஒப்பந்தத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. மீண்டும் 2017ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது. அமெரிக்கா தரப்பில் இந்த ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட இக்கட்டான காலங்களில் அமெரிக்கா தனது உதவியினை நேபாளத்திற்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கபட்ட நேபாள மக்களுக்கு அமெரிக்கா சார்பில் உதவி வழங்கப்பட்டதையும் நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் சுட்டிக் காட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.