எரிபொருள், மின் பற்றாக்குறை: இலங்கையில் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் நாளை முதல் மூடல்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை அலுவலகங்களை திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை அலுவலகங்களை திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துமாறு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பொது நிா்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியாா் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பணியாளா்கள் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...