27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தென்கொரியா அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ: தேசிய பேரிடர் பகுதியாக அறிவிப்பு!

தென்கொரியாவில் அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 மார்ச் 2022, 10:33 am IST

தென்கொரியாவில் அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் உல்ஜின் பகுதியில் அந்நாட்டுக்குச் சொந்தமான அணுமின் நிலையம் உள்ளது. கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள இந்த அணுமின் நிலையம் அருகே நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பகுதியை தேசிய பேரிடர் பகுதியாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். 

காட்டுத்தீயில் இருந்து அணுமின் நிலையத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் முடுக்கி விட்டுள்ளார். 

காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். பலத்த காற்றுக்கு மத்தியில், சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.