இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

'ரஷியத் தாக்குதலுக்கு நேட்டோ பச்சைக்கொடி காட்டுகிறது' - உக்ரைன் அதிபர் கண்டனம்

உக்ரைன் நாட்டில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

News image
உக்ரைன் அதிபர்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

உக்ரைன் நாட்டில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பிற நாடுகளின் ராணுவ தளவாடங்கள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அவ்வப்போது நாட்டின் நிலைமை குறித்து விடியோ பதிவிட்டு வருகிறார். 

உக்ரைன் நாட்டில் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் அதிபரின் கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ரஷியப் படையின் தாக்குதல் தீவிரம் அதிகரிக்கும் என்றும் தெரிந்தும் புதிய தாக்குதல்களும் இழப்புகளும் தவிர்க்க முடியாதவை என்று அறிந்தும் உக்ரைன் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ படைகள் மறுப்பது, ரஷியப் படையின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாகவே உள்ளது. 

உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்த நேட்டோ பச்சைக்கொடி காட்டியுள்ளது' என்று விமரிசித்துள்ளார். 

இதையடுத்து நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைன் அதிபரின் கோரிக்கையை ஏற்றால் ஐரோப்பா கண்டம் முழுவதுமே போர்ச்சூழல் உருவாகும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.