ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரஷியா - உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் மார்ச் 10-ல் பேச்சு

ரஷியா - உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10ஆம் தேதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

News image
Updated On :7 மார்ச் 2022, 12:27 pm

DIN

ரஷியா - உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10ஆம் தேதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து முப்படைகளும் உக்ரைனை தாக்கி வருகின்றனர். தொடர் தாக்குதல் மூலம் முக்கிய நகரங்களையும் ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.

போரை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ரஷியாவுக்கு அழுத்தம் தந்தாலும் தொடர்ந்து 12ஆவது நாளாக உக்ரைனை தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமிட்ரோ குலேபா ஆகியோர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் பேச்சுவார்த்தையானது, மார்ச் 10ஆம் தேதி துருக்கி நாட்டில் கடற்கரை மாகாணமான அண்டல்யாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழலில் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.