ரஷிய அதிபருடன் 50 நிமிடங்கள் பேசிய மோடி

ரஷிய அதிபர் விளாமிதீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளாதிமீர் புதின் /  நரேந்திர மோடி
விளாதிமீர் புதின் / நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

ரஷிய அதிபர் விளாமிதீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகின்றது.

உக்ரைன் மற்றும் ரஷிய அதிபருடன் இந்திய பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த வாரம் போர் சூழல் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்று பகலில் மீண்டும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மோடி 35 நிமிடங்கள் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரும் 50 நிமிடங்கள் வரை கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த பேச்சின்போது, வடகிழக்கு முக்கிய நகரான சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ரஷியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்ற புதின், சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக விரைவில் மீட்க அனைத்து விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com