தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து சுமார் 300 பேருடன் நேற்று தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷானனுக்குத் திருப்பி விடப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷானன் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் தற்போது விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பிளைட் ரேடார் 24 இணையதளத் தகவலின்படி, திருப்பி விடப்படுவதற்கு முன்பு விமானம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வானில் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
An Air India A350 aircraft from New York to Delhi was diverted to Shannon in Ireland due to a suspected technical snag on Monday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


