விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், விமான எரிபொருளின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனது சேவைகளில் தினசரி 100 விமானங்களை ஜூன் மாதம் முதல் குறைக்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் அதிக அளவில் குறைப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, தற்போது தினசரி 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியாவின் சேவைகளில் 10 சதவிகிதமாகும்.
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் பங்கீடு செலவும் மட்டும் சுமார் 40 சதவிகிதமாக இருக்கும்நிலையில், எரிபொருள் மீதான சிறிய விலை உயர்வும் நிறுவனத்தின் லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கிறது.
Summary
Air India may cut 100 flights daily as jet fuel prices hit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து முதலாண்டு நினைவு நாள்! பாதிக்கப்பட்டோர் நிலை என்ன?
ஏர் இந்தியா விமான விபத்து: முதலாண்டு நினைவு நாளில் 2 நிமிட மௌன அஞ்சலி

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



