சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு

News image

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 8:06 am

விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், விமான எரிபொருளின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால், இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனது சேவைகளில் தினசரி 100 விமானங்களை ஜூன் மாதம் முதல் குறைக்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் அதிக அளவில் குறைப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, தற்போது தினசரி 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியாவின் சேவைகளில் 10 சதவிகிதமாகும்.

விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் பங்கீடு செலவும் மட்டும் சுமார் 40 சதவிகிதமாக இருக்கும்நிலையில், எரிபொருள் மீதான சிறிய விலை உயர்வும் நிறுவனத்தின் லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கிறது.

Summary

Air India may cut 100 flights daily as jet fuel prices hit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.