புது தில்லி: உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷிய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சுமார் 7,000 வெளிநாட்டினர் பிணைக் கைதிகளாக உக்ரைன் சிறைபிடித்திருப்பதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் கீவ், செர்னிஹிவ், சுமி, கார்கோவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து மாஸ்கோ வரை சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,மனிதநேயத்தின் அடிப்படையில், அனைத்து நகரங்களிலிருந்தும் ரஷியாவுக்கு ஒரு பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உக்ரைன் நகரில் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டின் துறைமுகங்களில் 70 கப்பல்கள் சிக்கிக் கொண்டிருப்பதகாவும் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ரஷிய தூதரகம் சார்பில் கூறப்படுவது என்னவென்றால், எங்கள் தரப்பிலிருந்து சுமார் 10 பாதுகாப்பு வழித்தடங்களுக்கு அனுமதி கொடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், உக்ரைன் வெறும் 2 பாதைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.