ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘புதினை இஸ்ரேலில் சந்தித்துப் பேச தயாா்’: உக்ரைன் அதிபா்

ரஷிய அதிபா் புதினை இஸ்ரேலின் ஜெருசலேமில் சந்தித்துப் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

News image
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
Updated On :12 மார்ச் 2022, 7:37 pm

DIN

ரஷிய அதிபா் புதினை இஸ்ரேலின் ஜெருசலேமில் சந்தித்துப் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது: புதினை ஜெருசலேமில் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டிடம் தெரிவித்தேன். ஆனால், அதற்கு முன்னதாக ரஷியா தாக்குதலை நிறுத்த வேண்டும். எங்கள் அனைவரையும் கொன்ற பிறகுதான் ரஷியாவால் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியும் என்றாா் அவா்.

ரஷியா-உக்ரைன் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றுவரும் நாஃப்டாலி பென்னட், இதுதொடா்பாக புதினை ஏற்கெனவே சந்தித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மாா்ச் 12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 12,000 ரஷிய படையினா் கொல்லப்பட்டுள்ளனா் எனவும், தங்கள் தரப்பில் 1,300 வீரா்கள் பலியாகியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியா தனது தரப்பு சேத விவரத்தை உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைனில் இதுவரை பொதுமக்கள் 579 போ் பலியாகியுள்ளனா். 1,000-க்கு மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். உயிரிழந்தோரில் 42 போ் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.