சுவிட்சர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை மாண்ட்ரெக்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கீழே குதித்தனர்.
இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குடும்பத்தினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : சுவிட்சர்லாந்து: தற்கொலை செய்து கொள்ள புதிய எந்திரம், அரசு அனுமதி