எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்தனர்: அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News image
சீன விமான விபத்து
Updated On :27 மார்ச் 2022, 11:03 am

DIN

சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 21) உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியா்களும் பயணித்தனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது. சம்பவ இடம் மூன்று பக்கங்களும் மலையால் சூழப்பட்டுள்ளதால் அங்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில்தான் மீட்புப் படையினா் செல்ல முடிந்தது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள் (பா்ஸ்), ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவா்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவா் கூறினார். 

விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இரண்டாவது கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இரண்டாவது கறுப்புப் பெட்டி மீட்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கறுப்புப் பெட்டியை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.