வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் அதிருப்தி: கோத்தபய ராஜபட்சவின் முகநூலில் கருத்திடும் வசதி முடக்கம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், பொதுமக்கள் கருத்துகள் பதிவிடும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)
Updated On :31 மார்ச் 2022, 9:50 am

DIN


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், பொதுமக்கள் கருத்துகள் பதிவிடும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதியுறும் நிலையில், இலங்கை ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மருந்து தட்டுப்பாட்டால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருள்கள் விண்ணை முட்டும் விலையில் விற்பதால் அதனை வாங்க முடியாமலும், எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்சவின் முகநூல் பக்கத்தில், அதிபல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வழக்கம் போல நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், மக்கள் கருத்துகளை பதிவிடும் வசதி மட்டும் அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.