பில்கேட்ஸ் தன் முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தன் மனைவி மெலிண்டாவைப் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றார். 30 ஆண்டு கால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டதாகவும் இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு எனக் கூறியிருந்தார்.
மேலும், பில்கேட்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையில் விவாகரத்துக்குப் பின்பும் மெலிண்டா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த பில் கேட்ஸ் ‘திருமண வாழ்வு சிக்கலானது. அதை ஆராய்வது வீண். விவாகரத்து தாக்கத்திலிருந்து இருவரும் மீண்டு வருகிறோம். எனக்கு வேறொரு திருமணத்தைச் செய்ய விருப்பமில்லை. மீண்டும் மெலிண்டா கேட்ஸை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அவர் என்னைத் திருமணம் செய்வாரா எனத் தெரியாது’ எனக் கூறியுள்ளார்.
பில் கேட்ஸ் மெலிண்டா தம்பதியருக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


