சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாள விமான நிலையத்தில் மர்ம பொருள்: பயணிகள் வெளியேற்றம்

நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

News image
நேபாள விமான நிலையத்தில் மர்ம பொருள்: பயணிகள் வெளியேற்றம் (கோப்புப்படம்)
Updated On :4 மே 2022, 7:37 am

DIN

நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

நேபாள விமான நிலைய அதிகாரிகளுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலையத்தின் உள்ளூர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்விடுக்கப்பட்டது.

உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கைத் தகவல் கொடுக்கப்பட்டு மர்ம பொருளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அழைப்பு விடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.