எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உச்சமடையும் போராட்டம்: மகிந்த ராஜபட்சவை சுற்றிவளைத்த மக்கள்

மகிந்த ராஜபட்ச தஞ்சம் அடைந்த கடற்படைத் தளபதி வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
மகிந்த ராஜபட்ச
Updated On :10 மே 2022, 11:23 am

DIN

மகிந்த ராஜபட்ச தஞ்சம் அடைந்த கடற்படைத் தளபதி வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை நேற்று திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்துபோது அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தை தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.

போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்த நிலையில் அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் எனவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை இரவு மகிந்த ராஜபட்சவின் வீட்டிற்கு  தீ வைத்தனர். இதனால், இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களிடமிருந்து தப்பிக்க மகிந்த ராஜபட்ச வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கடற்படை தளபதி வீட்டில் தஞ்சமடைந்துள்ள ராஜபட்சவை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.