பாகிஸ்தானின் விருந்தோம்பலை பாராட்டிய சரத் பவார்

புனே (மகாராஷ்டிரா) : தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புனே ஈத்-மிலன் கொண்டாட்டத்தில் பாகிஸ்தானின் விருந்தோம்பல் பண்பினை புகழ்ந்து பேசினார். 
பாகிஸ்தானின் விருந்தோம்பலை பாராட்டிய சரத் பவார்
Updated on
1 min read

புனே (மகாராஷ்டிரா) : தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புனே ஈத்-மிலன் கொண்டாட்டத்தில் பாகிஸ்தானின் விருந்தோம்பல் பண்பினை புகழ்ந்து பேசினார். 

கிரிக்கெட் மேட்சுக்காக பாகிஸ்தான் சென்றிருந்த நினைவுகள் குறித்து அவர் பேசியதாவது: 

கராச்சியில் கிரிக்கெட் மேட்ச் முடிந்த பிறகு, வீரர்கள் பாகிஸ்தானை சுற்றிபார்ர்க்க எங்கேயாவது போகலாமா என்று என்னிடம் கேட்டனர். நாங்கள் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு பணம் குடுக்க சென்றோம். அவர்கள் எங்களிடம் பணம் வாங்கவில்லை. கேட்டதற்கு நாங்கள் விருந்தாளிகள் என்றும் விருந்தாளிகளிடம் பணம் வசூலிப்பதில்லை. எங்களுக்கு சச்சினை தெரியும். அவருடைய ஆட்டத்திற்கு நாங்கள் ரசிகர்கள் என்றும் கூறினர். பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் இந்தியாவுடன் அமைதியாகவும் சகோதரத்துடனும் பழகவே விரும்புகின்றனர். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பவர்கள் தான் விரோதத் தன்மையை வளர்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com