வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்ட மறுநாள், அந்த நோய் பாதிப்பு காரணமாக 6 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் வேகமாகப் பரவி வரும் ‘காய்ச்சலுக்கு’ இதுவரை 5,24,440 பேர் லட்சம் போ் சிசிக்சை பெற்றனா். அவா்களில் 2,80,810 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; நேற்று ஒரே நாளில் 174,440 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். இதையடுத்து தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.