சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: பங்கேற்க முயற்சிக்கும் ரஷியா

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷிய அரசு முறையீடு செய்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷிய அரசு முறையீடு செய்துள்ளது. 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், செஸ் தொடரில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து மேற்கு நாடுகள் ரஷியா மீதான தடைகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் விளையாட்டுத் துறையில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவின் பெயர், கொடி பயன்படுத்த பிஃபா அமைப்பு தடை விதித்துள்ளது.

ரஷிய கிளப் அணிகள் விளையாட ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. மேலும், உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ரஷியா, பெலராஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்ய அரசு முறையீடு செய்துள்ளது. 

மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.