அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான உறவு ஆழமானது: ஜெய்சங்கர்

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :17 மே 2022, 11:30 am

DIN

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு தூதர் ராஜீவ் பாட்டியாவின் ”இந்திய-ஆப்பிரிக்க உறவுகள்: சேஞ்சிங் ஹாரிசான்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய-ஆப்பிரிக்க உறவு குறித்து அவர் கூறியதாவது, “ மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்கம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் தொடர்பை அதிகப்படுத்தியது. இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே கலாசார பரிமாற்றங்கள் நடைபெற்றது. இறுதியில், இந்திய மக்கள் அதிக அளவில் ஆப்பிரிக்காவில் வசிக்கும் அளவிற்கு நட்பு பெருகியது. மேற்கத்திய நாடுகளால் அடக்குமுறைக்கு ஆளானோம். பின், அவர்களிடமிருந்து போராடி சுதந்திரம் அடைந்தோம். காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட  எங்களுக்கு இடையிலான நட்பு அதை அனுபவிக்காதவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான நட்பு மேலும் அதிகரித்துள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.