சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கன்: மூன்று குண்டுவெடிப்புகளில் 9 பேர் பலி, 15 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நான்கு குண்டுவெடிப்புகளில், 9 போ் பலியானதாகவு

News image
Updated On :26 மே 2022, 10:20 am

DIN

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 போ் பலியானதாகவும், 15 போ் காயமடைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் 3 வாகனங்களையும் ஒரு மசூதி பகுதிகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் வாழும் ஷியா சிறுபான்மையின ஹஸாரா இனக்குழுவை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் மசூதி அருகிலும் மத வழிபாட்டு பள்ளியிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 33 ஷியா முஸ்லிம்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.