தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான அம்மாவுக்கு மகளின் உருக்கமான அஞ்சலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தனது அம்மாவுக்கு அவரது மகள் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:21 am

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தனது அம்மாவுக்கு அவரது மகள் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் யுவால்டி என்னும் இடத்தில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இந்தத் தாக்குதலில் அந்த பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியை ஈவா மிரல்ஸ் கொல்லப்பட்டார். தனது வகுப்பில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது அவர் கொல்லப்பட்டார். ஆசிரியை ஈவா மிரல்ஸின் மகள் அடலின் ரூய்ஸ் ட்விட்டரில் தனது அம்மாவுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ என்னுடைய அன்பான அம்மா, நான் உங்களை எப்போதும் மிஸ் செய்கிறேன். நீங்கள் தான் என்னுடைய ஹீரோ. குழந்தைகளை பாதுகாப்பதற்காக உங்களது இன்னுயிரை கொடுத்திருக்கிறீர்கள். உங்களது குரலை கேட்க வேண்டும் போல் இருக்கிறது. காலை வீட்டில் நாய்களுடன் விளையாடிய உங்களுடைய நினைவு என் கண் முன்னே நிற்கிறது. எனக்கு பள்ளி முடிந்ததும் மறக்காமல் தினமும் 4.30 மணிக்கு போன் செய்து பேசுவீர்கள். நான் உங்களுடைய மகள் எனக் கூறிக் கொள்வதில் என்றும் பெருமையடைகிறேன். நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் கூற முடியவில்லை. நீங்கள் இல்லாமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. நான் உங்களுக்காக இப்படி ஒரு பதிவை எழுதுவேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நீங்கள் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ அம்மா. நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழப்போகிறேன் எனத் தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பர் இப்போது எனக்கு அருகில் இல்லை. நீங்கள் எப்போதும் எனக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள் ” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.