நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நேபாள விமான விபத்து: 14 சடலங்கள் மீட்பு

நேபாள விமான விபத்தில் பலியான 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விபத்துக்குள்ளான விமானம்

Updated On :30 மே 2022, 6:07 am

DIN

நேபாள விமான விபத்தில் பலியான 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

நேற்று காலை முதலே ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வந்த நிலையில், விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்துள்ளனர்.

விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ள ராணுவத்தினர், உடற்கூராய்வுக்காக காத்மாண்டுவிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தொடர்ந்து, மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவத்தினருடன் இணைந்து மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் குறித்து நேபாளம் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

14,500 அடி உயரத்தில் விபத்து நடந்துள்ளது. மீதமுள்ள பயணிகளை தேடும் பணிக்காக 15 பேர் கொண்ட ராணுவ குழுக்கள் 11,000 அடியில் இறக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் பயணிகள் அனைவருமே உயிரிழந்திருக்கக்கூடும். இருப்பினும், சடலங்கள் கிடைக்கும் வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.