நேபாளத்தில் 22 பயணிகளுடன் மாயமான ராணுவம் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

மாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
மாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. 

‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 நேபாளி பயணிகள், விமானி உள்ளிட்ட 3 நேபாளி விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்’ என்று அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறினாா்.

இதுகுறித்து, அங்குள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘4 இந்தியா்கள் உள்பட 22 பேருடன் புறப்பட்ட தாரா நிறுவன விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த இந்தியா்களின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடா்பில் இருந்து வருகிறது. +977-9851107021 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய நால்வரும் விமானத்தில் பயணம் செய்த இந்தியா்கள் என அடையாளம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேபாள ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் கண்டுபிடித்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாராயண் சில்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து, சில்வால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விமானியின் செல்போன் ஜிபிஎஸ் மூலம் விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. 

மோசமான வானிலை காரணமாக இமயமலை தேசத்தின் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காணாமல் போன விமானத்தை சில நிமிடங்களில் கண்டுபிடிப்பது என்பது கடினம் என தெரிவித்துள்ளார்.

தற்போது, விமானம் விபத்துக்குள்ளான படத்தை முதல் முதலாக நேபாள ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. 

இருப்பினூம் இப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால் மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், விமானங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட 22 பேரின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, 

முஸ்தாங்கில் தோரோங் லா மலைப்பாதையின் அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்திய மற்றும் நேபாள யாத்ரீகர்களுக்கு இது ஒரு பிரபலமான பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com